சிரம்பான், ஏப்ரல் 04-
தமது 5 வயது மகனுக்கு காயம் ஏற்படுத்தியதாக கணவன் மனைவி இருவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டது.
29 வயதுடைய முஹம்மத் சூல் ஷபிக் ஷம்மாடி மற்றும் 25 வயதுடைய நுர்வாடாஹதுல்பத்தாநாஹ் மொஹமட் ஆகியோருக்கு நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஜி முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்படுவதற்கு முன்பாக விசாரணை கோரப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மன்தின், ஜாலான் பஞ்சைண்டெற6 -வில் உள்ள ஒரு வீட்டில் தமது பராமரிப்பில் வைத்திருக்கும் 5 வயது சிறுவனை ரோட்டான் மற்றும் ஹேங்கர்-களை பயன்படுத்தி அச்சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.