காலுறை விவகாரத்தை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

அல்லா சொல் கொண்ட காலுறை விற்பனை தொடர்பில், சமய உணர்வைத் தூண்டி மக்களிடையே வெறுப்புணர்வை விதைக்கும் நடவடிக்கையை உம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலேஹ் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தனது அரசியல் நலனுக்காக சமய உணர்வை அவர் பயன்படுத்தி கொள்வாரேயானால், அவர் அரசியல் தடத்தில் நிலைத்து நிற்க முடியாது என பிகேஆர் உதவித் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹ்மத் வலியுறுத்தினார்.

சர்ச்சைக்குரிய காலுறையை விற்பனை செய்திருந்த KK மார்ட் கடைகளை புறக்கணிக்கும் பரப்புரையை டாக்டர் அக்மால் சாலேஹ் தீவிரமாக முன்னெடுத்ததிலிருந்து, நாட்டு மக்களிடையே இனப் பதற்றம் ஏற்பட்டுள்ளதோடு, எதிர்மறையான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

இதுவரையில் KK மார்ட்-ட்டின் 3 கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசியலில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள அவ்விவகாரத்தை கேடயமாக பயன்படுத்திக்கொள்வதால், மக்களுக்கு எவ்வித ஆதாயமும் கிடைக்க போவதில்லை.

மக்களுக்கு உண்மையாக ஆதாயமளிக்கக்கூடிய கடுமையான விவகாரங்களைக் கண்டறிந்து அவர் குரல் கொடுக்க வேண்டும். காலுறை விவகாரத்தை யாரும் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டாம் என பேரரசர் வழங்கியுள்ள உத்தரவை டாக்டர் அக்மால் சாலேஹ் மதிக்க வேண்டும் என நிக் நஸ்மி நிக் அஹ்மத் கேட்டுக்கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்