கோலாலம்பூர், ஏப்ரல் 26-
பிரிக்பில்ட்ஸ்-சில் உள்ள வீடொன்றில் சத்தம் போட்டு சண்டையிட்டு கொண்ட காதலர்களின் செயலினால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர் நோக்கத்துடன் அவர்களின் காரை மோதி தள்ளியதாக கூறப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாதிக்கப்பட்ட 40 வயதுடைய ஆடவரிடமிருந்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக Brickfields மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கோமிஷனர் க்கு மஷாரிமான் க்கு மஹ்மூத் தெரிவித்தார்.
முன்னதாக, அவ்வாடவருக்கும் அவரின் காதலிக்கும் கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டை ஏற்பட்டதாகவும், பின்பு அவர்கள் கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறிய போது சந்தேகிக்கும் 35 வயதுடைய அந்நபர் கோபமடைந்து அவர்களின் காரை வேண்டுமென்றே மோதியதாகவும் க்கு மஷாரிமான் க்கு மஹ்மூத் கூறினார்.
இதை தொடர்ந்து சந்தேகிக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டதுடன் விசாரணையில் அவர் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் விவரித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 427 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் சந்தேகிக்கும் அந்நபர் மூன்று நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக க்கு மஷாரிமான் குறிப்பிட்டார்.