கோலாலம்பூர், ஏப்ரல் 26-
கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் MUDA மற்றும் அதன் தோழமை கட்சியான PSM எனப்படும் மலேசிய சோஷலிச கட்சி போட்டியிடப் போவதில்லை என்று இன்று அறிவித்துள்ளது.
இந்த இடைத் தேர்தல் தொடர்பாக இன்று இரு கட்சிகளும் நடத்திய சந்திப்பில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக PSM கட்சியின் துணைத் தலைவர் S. அருட்செல்வம் தெரிவித்தார்.
இந்த இடைத்தேர்தல் ஒற்றுமை அரசாங்கத்திற்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் நடைபெறுவதற்கு ஏதுவாக இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கியிருப்பது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாக அருட்செல்வன் குறிப்பிட்டார்.