காதலர் தினத்தை கொண்டாட பிள்ளைகளை அழைத்து கள்ள காதலனுடன் சென்ற தாய்

Pekan Lunas – ஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஒரு தனித்தும் வாழும் தாய் தமது இரு பிள்ளைகளை அழைத்து கள்ள காதலனுடன் சென்றிருந்த போது போலீசாரால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இரவு 10:55 மணியளவில் 41 வயதுடைய அப்பெண் உட்பட 43 வயதுடைய அவ்வாடவன் கூலிம், மாவட்ட மத அலுவலகத்தின் அமலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அவ்விடத்தில் காதலர் தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட Op Kasih Sayang சோதனையில் இவ்விருவரும் கையும் களவுமாக சிக்கியதாக கூலிம் மாவட்ட மத அமலாக்க அதிகாரி Anwar Sharifuddin Mat Saad தெரிவித்தார்.

அந்த தங்கும் விடுதில் நடத்தப்பட்ட சோதனையில் இரண்டு குழந்தைகளுடன் ஒரு ஆண் பெண்ணும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக Anwar Sharifuddin மேலும் விவரித்தார்.

சம்பந்தப்பட்ட பெண் அக்குழந்தைகள் அவருடையது என்று ஒப்புக்கொண்டதுடன் அந்நபர் தமது காதலன் என கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவ்விருவரும் கணவன் மனைவி என்ற சாட்சியங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மேல் விசாரனைக்காக காவல்துறைக்கு அழைத்து சென்றிருப்பதாக Anwar Sharifuddin விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்