ஜோகூர், Lebuhraya Pesisir Pantai நெடுஞ்சாலையின் அருகே, அல்ஃபார்ட் வகை கார் ஒன்று கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில், ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை நடந்த இச்சம்பவத்தில், கார் விழுந்த 15 மீட்டர் தூரத்தில் ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக ஜோகூர் மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் மூத்த அதிகாரி அஸ்மி தெரிவித்தார்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.