கார் மரத்தில் மோதியது, பெண் மரணம்

ஜார்ஜ்டவுன், ஏப்ரல் 20-

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மரத்தில் மோதியதில் அதில் பயணித்த பெண் உயிரிழந்த வேளையில் மேலும் இருவர் பலத்த காயங்களக்கு ஆளாகினர்.

இவ்விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 4.20 மணியளவில் பினாங்கு, ஜார்ஜ்டவுன், ஜாலான் மக்கலிஸ்டர் சாலையில் நிகழ்ந்தது.

அந்த வோக்ஸ்வேகன் காரை செலுத்திய 24 வயது ஃபூ யூ சுவா என்ற பெண்மணி பலத்த காயங்களக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியேற முடியாமல் பரிதவித்த மேலும் இரு ஆடவர்களை, தீயணைப்பு,மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தி, அந்த இருவரையும் மீட்டனர் என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் செயலாக்க அதிகாரி ஷாரி மன்சர் தெரிவித்தார்.

காயமுற்ற இருவர் தற்போது பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்