கார் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளோட்டி உயிரிழந்தார்

தங்காக், ஏப்ரல் 03-

ஜொகூர், தங்காக், கம்போங் பாடாங் லெரேக் 1 -யில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலைவிபத்தில் பதின்ம வயதுடைய இளைஞன், சம்பவ இடத்திலேயே மாண்டார்.

15 வயதுடைய இளைஞன் செலுத்திய மோட்டார்சைக்கிள், மூவர் பயணித்திருந்த புரோட்டான் வீரா வாகனத்துடன் மோதியதால் அந்த விபத்து நேர்ந்தது.

நேற்றிரவு மணி 10.24 அளவில் தகவல்பெற்றதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த எழுவர் கொண்ட தங்காக் தீயணைப்பு மீட்பு படையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

உயிரிழந்த இளைஞனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட வேளை, காரில் பயணித்திருந்த ஓர் ஆடவரும் இரு பெண்களும் காயங்களுக்கு இலக்காகியிருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லபட்டனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்