KK மார்ட் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கிய நபரை போலீஸ் தீவிரமாக தேடுகின்றது

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங், குவாந்தான், சுங்காய் ஈசாப்-ப்பிலுள்ள KK மார்ட் கடை மீது கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில், ஒரு நபர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட கடையின் சுற்றுப்பகுதியிலுள்ள CCTV காணொளிகளை ஆராய்ந்ததில் அந்த தகவல் கிடைக்கப்பெற்றிருப்பதாக Kuantan மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கூறினார்.

CCTV காணொலியில் உள்ள நபரை அடையாளம் காணும் முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள வேளையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்தவர்கள் போலீசிடம் அதனை தெரிவிக்கும்படி அசிஸ்டென் கொமிசியோனிற் வான் மோஹட் சஹாரி வான் புசு கேட்டுக்கொண்டார்.
அச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் நால்வரிடம் போலீஸ் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக வான் மோஹட் சஹாரி தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்