சாண்ட்விச் சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்

திரெங்கானு, பெராசிங்-கில் உள்ள நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் நிலையத்தில் (R&R) வாங்கப்பட்ட காலாவதியான சாண்ட்விச் ரொட்டியை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அப்பெண் கோலதிரங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்ததாக அவரின் உறவினரான சஹாரா நபிலா முகநூலில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

இச்சம்பவத்தை குறித்து சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தகவலும் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த R&R வியாபாரி மீது தக்க தண்டனை எடுக்க சுகாதார அமைச்சகம் முன்வர வேண்டும் என்று சஹாரா நபிலா வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்