கிள்ளானை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை 1,184 பேர் கைது

கிள்ளான் அரச நகரை, குற்றச்செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தும் நடவடிக்கையாக Op Khas Aman என்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 1,184 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போ​லீஸ் தலைவர் டத்தோ ஹுசின் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.

பிடிபட்டுள்ள நபர்களில் 85 பேர், குண்டர் கும்பல் தொடர்புடையவர்கள் ஆவர் என்று டத்தோ ஹுசின் ஓமர் கான் குறிப்பிட்டுள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில் குற்றச்செயல்களை துடைத்தொழிக்கும் முயற்சியாக கிள்ளா​னின் அ​தீத கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்