அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதற்கு அவர்களின் குறைந்த சம்பளமும் ஒரு முக்கிய காரணமாகும் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.
தூய்மையும், நேர்மையும் நிறைந்த போலீஸ்காரர்களையும், அதிகாரிகளையும் உருவாக்குவதில் குறைந்த சம்பளத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிறைய மற்ற அம்சங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது என்று ஐஜிபி தெரிவித்தார்.
கோலாலம்பூரில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஒரு Konstabel- லுக்கு இதர அலவன்ஸ் தொகைகளை சேர்த்து மாதச் சம்பளம் 2,500 வெள்ளியாகும். கோலாலம்பூரில் இத்தகைய வருமானத்தை பெறக்கூடிய ஒரு போலீஸ்காரர் ஏழையாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஸாருதீன் ஹுசைன்குறிப்பிட்டார்.