குடிநீர் விநியோகம் இன்றிரவு வழக்க நிலைக்கு திரும்பும்

பினாங்கு மாநிலத்தில் குடிநீர் விநியோகத் தடை இன்றிரவு முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என்று மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் உறுதி அளித்துள்ளார்.

சுங்கை பெராய் யில் மண்ணடி நீர் குழாய் உடைத்து விட்டதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை பினாங்கில் பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு கொள்கலன்கள் லோரியின் மூலம் நீர் விநியோகம் செய்யப்பட்ட போதிலும் பாராட் டாயா மாவட்டத்தில் சில பகுதிகளில் மட்டுமே நீர் விநியோகம் இல்லை. எனினும் இன்றிரவு நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்