கொலை தொடர்பில் அந்நிய நாட்டவர் கைது

கெந்திங் ஹைலண்ட்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 45 வயது அந்நிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூரை சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் நேற்று அந்த ஹோட்டலில் நிகழ்ந்த கைகலப்பில் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அன்றைய தினமே அந்த ஹோட்டலுக்கு அருகில் சம்பந்தப்பட்ட அந்நியப்பிரஜையை போலீசார் கைது செய்துள்ளதாக பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைஹான் முகமது கஹர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட வர்த்தகருக்கு, போதைப்பொருள் கடத்தல் உட்பட் ஏற்கனவே 23 குற்றப் பதிவுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட நபரின் உடல் சவப்பரிசோதனைக்காக குவந்தான், தேங்கு அம்புவான் அஃப்சான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜைஹான் முகமது கஹர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்