குடும்பமாது கஸ்தூரி பாதுகாப்பாக உள்ளார்

ஜோகூர், மார்ச் 28-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர், கூலாயிலிருந்து பகாங், பெந்தோங்கில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு புறப்பட்டு சென்ற போது காணாமல் போனதாக புகார் செய்யப்பட்ட தனது மனைவி கஸ்தூரி சுப்பிரமணியம், பாதுகாப்பாக உள்ளார் என்று கணவர் சி. முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

41 வயது கஸ்தூரியின் பாதுகாப்பு குறித்து கடந்த நான்கு நாட்களாக அவரின் கணவர் முத்துக் குமாரும் மூன்று பிள்ளைகளும், கவலையுற்று இருந்த நிலையில் தாம் பாதுகாப்பான ஓர் இடத்தில் இருப்பதாக தமது மனைவி குறிப்பு ஒன்றை அனுப்பியிருப்பதாக கணவர் முத்துக்குமார் திசைகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், குலாய், பண்டார் புத்ரா, லோரோங் பங்காவு- வை சேர்ந்த கஸ்தூரி கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.45 மணியளவில் பெந்தோங்கில் உள்ள தமது தாயார் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் அதற்கு அவரின் கைப்பேசி தொடர்பு கிடைக்காததைத் தொடர்ந்து மனைவியின் பாதுகாப்பு கருதி, கணவர் முத்துக்குமார் கோலாலம்பூர் செந்தூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்