விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

கெடா, மார்ச் 31 –

கெடா, ஜாலான் சுங்கை லீமௌ டாலாம்மில் கடந்த வெள்ளிக்கிழமை லாரியுடன் கார் மோதியத்தில், காரில் பயணித்த மற்றொரு நபர் இன்று உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், அந்த காரில் பயணித்த மூன்று நபர்களும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

66 வயதுடைய பாரிடா ஆவாங் டாஹாமான் என்ற முதியவர் சுங்கை பெட்டானி, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் டிபுட்டி சுப்ரின்டென்டன் ஷாஹாஸ் அக்தார் ஹாஜி தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அம்முதியவரின் உடல் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஷாஹானாஸ் அக்தார் அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்