கோலாலம்பூர், மார்ச் 14 –
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக பாதுகாவலர் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
அசாஸ் கூக்கோ, செக்கூரித்தி செர்விசஸ் நிறுவனத்தின் இயக்குநரான 45 வயது யு.யோகேஸ்வரன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி மெனாரா பூமிபுத்தெரா, பெங்க் முவாலாட் வங்கியில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டப்பட்டார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 409 பிரிவின் கீழ் யோகேஸ்வரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும், குற்றச்சாட்டை மறுத்து யோகேஸ்வரன் விசாரணை கோரியதை தொடர்ந்து அவரை 30 ஆயிரம் வெள்ளி ஜாமினில் விடுவிப்பதற்கு நீதிபதி அசுரா அல்வி அனுமதி அளித்தார்.