குற்றச்சாட்டை மறுத்தார் ஹன்னா இயோ

கோல குபு பாரு, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பனை புறக்கணிப்பதற்கான இயக்கத்தை குறிப்பிட்ட தரப்பினர் முடுக்கி விடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுவதை இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சரும் டிஏபி பிரச்சாரக் குழு உதவி செயலாளருமான ஹன்னா இயோ வன்மையாக மறுத்துள்ளார்.

புறக்கணிப்பு இயக்கம் தொடங்கப்படுமானால் மோசமான விளைவுகளை தருவது மட்டுமின்றி நாட்டில் மக்களுக்கு ஆரோக்கியமான செயல் அல்ல என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

இது போன்ற எதிர்மறையான பேச்சுக்களை முற்றாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாக்களிக்க செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்படுவது ஆக்கமிகுந்த நடவடிக்கை அல்ல என்பதுடன் நாட்டிற்கு அது நல்லதல்ல என்பதையும் அமைச்சர் ஹன்னா இயோ தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்