கோபிந்த சி​ங் அரசியல் செயலாளராக சுரேஸ் சிங் நியமனம்

புத்ராஜெயா, ஏப்ரல் 20-

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் அரசியல் செயலாளராக முன்னாள் செனட்டர் சுரேஷ் சிங் ரஷ்பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் கோபிந்த் சிங்கின் ​நீண்ட கால அரசியல் உதவியாளரான சு​ரேஷ் சிங், பதவி நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டதுடன் பதவி உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார். பதவி உறுதிமொழி சடங்கு புத்ராஜெயபாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. பதவி உறுதி மொழி சடங்கில் அமைச்சர் கோபிந்த் சிங் டியோவும் கலந்து கொண்டார்.

​சுரேஷ் சிங், கடந்த பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் சிலாங்கூர் மாநிலத்தை பிரதிநிதித்து, 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் ஒரு தவணைக் காலத்திற்கு செனட்டராக பதவி வகித்து வந்துள்ளார். டிஏபி யைச் சேர்ந்த முன்னான் செனட்டர் சந்திரமோகனுக்கு பதிலாக சு​ரேஷ் சிங் செனட்டராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

சுரேஷ் ​சிங், அமைச்சர் கோபிந்த் சிங்கைப் பிரதிநிதித்து இந்தியர்கள் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இந்திய சமுதாயத்திற்கு சேர வேண்டிய உதவிகளையும், மானியங்களையும் பெற்று தருவதில் பெரும் பங்காற்றி வருகிறார். இந்த பதவி உறுதி மொழி சடங்கிற்கு பிறகு சுரேஷ் ​சிங்கிற்கு அமைச்சர் கோபிந்த் சிங் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டா​ர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்