ஜோகூர் பாரு, மார்ச் 14 –
மலேசியா, போதைப்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு என்று கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ராசாருடின் ஹூசேன் வன்மையாக மறுத்துள்ளார்.
எனினும் வெளிநாடுகளில் தங்க முக்கோணப்பகுதிகளிலிருந்து போதைப்பொருளை குறிப்பிட்ட நாடுகளுக்கு கடத்துவதற்கு விமானங்களில் மாறிச்செல்வதற்கு ஒரு டிரான்சிட் மையமாக மலேசியாவை போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தி வருகின்றன என்பதை ஐஜிபி ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்கு அந்த கும்பல்கள் பெர்லிஸ், ஜோகூர், சிலாங்கூர் போன்ற பிரதான நுழைவாயில்களை பயன்படுத்துகின்றன என்று தான் ஶ்ரீ ராசாருடின் விளக்கினார்.