STPM முடித்த மனுதாரர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்

கோலாலம்பூர், மார்ச் 14 –

இவ்வாண்டு ஆசிரியர் பயிற்சி கழகங்களில் ஆசிரியர் இளங்கலை பட்டப்படிப்பிற்கு சேர்க்கப்படும் STPM உட்பட, STAM மற்றும் மெட்ரிக்குலோஷன் கல்வியை முடித்துவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
ஆசிரியர் தொழில்துறையில் தொடர்ந்து போதுமான ஆசிரியர் வர்க்கத்தினர் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியாக சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு ஆசிரியர் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு SPM கல்வியை முடித்த மனுதாரர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பயிற்சிக்கான வாய்ப்பை வழங்கி வந்த கல்வி அமைச்சு, இம்முறை புதிய மாற்றமாக STPM முடிந்த மனுதாரர்களுக்கு விரிவுப்படுத்துவதாக வோங் கா வோ மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்