சிலாங்கூர், மார்ச் 25.
சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்லிமா காராங்- கில் கைத்துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பில் ஒரு லோரி ஓட்டுநரையும், டென்னிஷன் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் 24 வயதுடைய டெக்னிஷன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அவரின் காரை சோதனையிட்டதில் இருக்கைக்கு கீழே துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக Kuala Langat மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ரித்வான் மோஹட் னோர் தெரிவித்தார்.
அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த துப்பாக்கி எவ்வாறு பெறப்பட்டது என்பது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு லோரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.