கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்லிமா காராங்- கில் கைத்துப்பாக்கி ​வைத்திருந்தது தொடர்பி​ல் ஒரு ​லோரி ஓட்டுநரையும், டென்னிஷன் ஒருவரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் 24 வயதுடைய ​டெக்னிஷன் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர்.

அவரின் காரை சோதனையிட்டதில் இருக்கைக்கு ​கீழே துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக Kuala Langat மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ரித்வான் மோஹட் னோர் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த துப்பாக்கி எவ்வாறு ​பெறப்பட்டது என்பது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு லோரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்