பாங்கி, மார்ச் 22.
பண்டார் துன் ஹஸ்ஸின் ஒண்- னில் முதியவர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கார் உரிமையாளரை துரத்தும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை 60 வயதுடைய அப்பெரியவருக்கும் 34 வயது காரின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இச்சம்பவம் நிகழ்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
கடனை திருப்பி செலுத்துவதில் தாமதமாக்கியதாக நம்பப்படும் அப்பெரியவரின் மகளின் வாகனத்தை மீட்டெடுக்க சென்ற அக்காரின் உரிமையாளரிடம் அவர் அத்தகைய சம்பவத்தை புரிந்திருப்பதாக கூறப்படுகின்றது.
கார் கடனில் இருப்பதாக எந்தவொரு ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அக்காரை எடுத்து செல்ல முடியாது என்று அப்பெரியவர் வாக்குவாதம் செய்ததுடன் துப்பாக்கியுடன் துரத்தியதாகவும் அக்காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்திருப்பதாக காஜாங், மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் மோஹட் சயிட் ஹாசன் குறிப்பிட்டார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோஹட் சயிட் ஹாசன் விவரித்தார்.