கூச்சிங், ஏப்ரல் 23-
கூச்சிங், பத்து காவா, தாமான் டெசா வீரா-வில் மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த திருட்டு கும்பலின் செயல்பாடு பொதுமக்களின் துரித நடவடிக்கையினால் முறியடிக்கப்பட்டது.
நேற்று காலை 7.54 மணியளவில் 50 வயதுடைய மூதாட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அவரின் கைப்பையை பறிக்க முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.
அச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது கைப்பையை கொள்ளையர்கள் பறித்திடாமல் இருப்பதற்காக போராடியதாகவும் அவ்வழியே வந்த வாகனமோட்டி ஒருவர் அந்நபர்களை வழிமறைத்து அம்மூத்தாட்டியை காப்பாற்றியதாக படவான் காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் லிம் ஜாவ் ஷியோங் கூறினார்.
சந்தேகிக்கும் நபர்களில் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட வேளையில் மற்றொருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக லிம் ஜாவ் ஷியோங் மேலும் தகவலளித்தார்.
இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.