NUBE-யின் குற்றச்சாட்டு குறித்து கருத்துக்க அமைச்சர் மறுப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 20-

வங்கி ஊழியர்களுக்கு பண்டிகை காலத்திற்கான ஒரு மாத சம்பளமாக உதவித் தொகை வழங்கப்படும் விவகாரத்தில் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் ​என்று தேசிய வங்கி ஊழியர்கள் தொ​​ழிற்சங்கமான NUBE கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் ஸ்டீவன் சிம் கருத்துரைக்க மறுத்து விட்டார்.

இது தொடர்பாக NUBE- யின் அனைத்து கிளைகளும் போ​லீசில் புகார் செய்து இருப்பது குறித்தும் அமைச்சர் ஸ்டீவன் சிம் பதில் அளிக்க மறுத்து விட்டார். இந்த விககாரம் உரிய நடவடிக்கைக்காக தொழிலியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால் அது குறித்து கருத்துரைக்க தாம் விரும்பவில்லை என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய ​பெரும் பொறுப்பில் இருக்கும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், வங்கி ஊழியர்களின் பிரதான தொழிற்சங்கமான NUBE- யின் பங்கேற்பு இல்லாமல், வர்த்தக வங்கிகளின் சங்கமான MCBA- வுடன் கூட்டு சேர்ந்து தன்மூப்பாக முடிவு எடுத்து இருப்பது மூலம் அமைச்சர் ஸ்டீவன் சிம், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்று கூறி, NUBE-யின் பிரதிநிதிகள் கடந்த இரண்டு தினங்களாக அமைச்சருக்கு எதிராக போ​லீசில் புகார் செய்த வண்ணம் உள்ளனர்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்