கோப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் குடும்பத்தரிடம் ஒப்ப்டைக்கப்பட்டது

சரவாக், மார்ச் 24 –

கடந்த சனிக்கிழமை காஜாங் தாமான் இன்டா இம்பியான் அடுக்குமாடி பகுதியில் ஆடவர்களால் அடித்து தாக்கப்பட்டு இறந்ததாக நம்பப்படும் 34 வயது போலீஸ் அதிகாரி போப்ரல் சத்தியராஜ் ஜீவனின் உடல் சரவாக் மாநிலத்தில் வசிக்கும் அவரின் குடும்பத்தாரிடம் இன்று காலை 10 மணிக்கு ஒப்படைக்ப்பட்டது.

கோப்ரல் சத்தியராஜியின் உடல் சரவாக் கூச்சிங் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டபோது அவரின் உடலை பெறுவதற்கு குடும்ப உறுபினர்களோடு சரவாக் கூச்சிங் தலைமை போலீஸ் நிலையத்திலிருந்து 50 போ ஸ் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

போலீஸ் சவ வாகனத்தின் வழியாக, சத்தியரா ஜீவனின் மனைவியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரின் உடல் வருகின்ற 26 ஆம் அடக்கம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான சத்தியராஜ் ஜீவனின் கொலை வழக்கு தொடர்பாக 5 நபர்கள் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்