சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழந்தார்

சுங்கை பெட்டானி, மார்ச் 25.

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.50 மணியளவில் சுங்கை பெட்டானி ,சிடாம்கீரி, சிம்பாங் கம்போங் பாடாங் புலுஹ் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 19 வயது மாணவி தலையில் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக கோலா மூடா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏ.எஸ்.பி சைடி சே ஹாசன் தெரிவித்தார்.

மொடேனாஸ் டைனமிக் ரக மோட்டார் சைக்கிளில் சுங்கைப் பட்டாணியிலிருந்து கூலிமை நோக்கி அந்த மாணவி சென்று கொண்டிருந்த போது 57 வயது நபர் செலுத்திய மெர்சிடிஸ் பென்ஸ் காரினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஏ.எஸ்.பி சைடி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்