லிப்பீஸ், மார்ச் 21 –
மூவர் பயணித்த கார் ஒன்று, டிரெய்லர் லோரியுடன் மோதி, விபத்துக்குள்ளானதில் மாது ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 8.15 மணியளவில் பகாங், லிப்பீஸ், லேபுராயா லிங்காரான் தெங்கா உத்தாமா நெடுஞ்சாலையில் 35 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
கோலாலம்பூர், Pantai Dalam- மை சேர்ந்த 55 வயது நோர் ஹபிபி ஹாமிட் என்ற அந்த மாது கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி மொகமாட் நோர் தெரிவித்தார்.
அந்த போரோடுவா மைவி காரில் பயணித்த 24 வயது ஓட்டுநர், 19 வயது பயணி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் கோல லிப்பிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.