கோலகுபு பாரு இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் கெராக்கான் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர்டொமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

கோலகுபு பாரு இடைத்தேர்தல் தொடர்பில் விவாதிப்பதற்கு வரும் திங்கட்கிழமை பெரிக்காத்தான் நேஷனலின் உயர் மட்டத் தலைவர்களுக்கான கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இந்த இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடுவது தொடர்பில் கட்சியின் தலைமையிடம் தெரிவிக்கப்படும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொண்டுள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் ஓர் இடைத் தேர்தலாக கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதி தேர்தல் அமையும் என்று டொமினிக் லாவ் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்