கோலாசிலாங்கூர், மார்ச் 5 –
கோலசிலாங்கூர் அருகில் கடற்பகுதியில் ஹெலிகாப்படர் ஒன்று, இன்று காலையில் விழுந்து நொறுங்கியதாக மலேசிய கடல்சார் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹெலிகாப்படர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை உறுதிபடுத்திய அந்த அமலாக்க ஏஜென்சி, அதனை தேடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இது தொடர்பாக தேடல் பிரிவைச் சேர்ந்த அனைத்து அரசாங்க ஏஜென்சிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.