கோல குபு பாரு இடைத்தேர்தல் வருகின்ற மே 11

சிலாங்கூர், ஏப்ரல் 04-

சிலாங்கூர் மாநிலத்தின் கோல குபு பாரு தொகுதியின் இடைத் தேர்தல் வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 27 ஆம் தேதியும் முன்கூட்டியே வாக்களிப்பு மே 7 ஆம் தேதியும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் காணி சல்லெஹ் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான 58 வயது லீ கீ ஹியோங் புற்றுநோயின் காரணமாக மார்ச் 21 ஆம் தேதி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது ஏழாவது இடைத்தேர்தலாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வாக்குச்சாவடி மையங்களை உள்ளடக்கிய 74 சேனல்கள் அமைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில் இரண்டு வாக்குப்பதிவு மையங்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் செயல்முறைக்கு தயார்ப்படுத்தப்பட்டிருக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்