நாட்டில், மே 12 முதல் 18 வரையில் கோவிட் 19 நோய்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,230 ஆகும்.
இது 14.8 சதவீதம் அதிகரித்து இருப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் கோவிட்19 – யினால் எவரும் மரணமடையவில்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மலேசியா உட்பட உலகளவில் கோவிட் 19 நிலையைக் குறித்து சுகாதார அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அது கூறியுள்ளது.
கடந்த மே 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் சிங்கப்பூரில் கோவிட்- 19 – யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருப்பதை தொடர்ந்து, சுகாதார அமைச்சகம் நாட்டில் பல பாதுகாப்புகளையும் நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.