சகோதரிக்கு அச்சுறுத்தலை விளைவித்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோத்தா பாரு, ஏப்ரல் 15-

தனது உடன் பிறந்த சகோதரியை இரும்பு மற்றும் கண்ணாடியை கொண்டு தாக்குவதை போன்று அச்சுறுத்தலை விளைவித்ததாக ஆடவர் ஒருவர் கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

40 வயது ஹஸ்லிமி ஹாசன் என்கிற அவ்வாடவர் மாஜிஸ்திரேட் அஹ்மத் சியாபிக் ஐசாட் நஸ்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்டு மொழிப்பெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அக்குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 506 பிரிவின் கீழ் அந்த ஆடவர் குற்றச்சாட்டப்படுவார்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை 3 மணியளவில் கோத்தா பாரு, கம்போங் தொக் டக்காங், ஜாலான் லோரோங் குபூர் பங்க்கொல்-கில் உள்ள தனது வீட்டில் 30 வயதுடைய சகோதரியை இரும்பு மற்றும் கண்ணாடியை கொண்டு மிரட்டல் விடுத்து அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அவ்வாடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்