சக பணியாளரை தாக்கிய ஆசிரியர் மூன்று நாட்கள் தடுப்புகாவல்

கெமாமன், ஏப்ரல் 22-

கெமாமன்- னில் உள்ள ஓர் ஆரம்பப்பள்ளியின் சிற்றூண்டிச் சாலையில் சக பெண் பணியாளரை தாக்கிய சம்பவ தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் மூன்று நாட்களுக்கு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 49 வயது அந்த ஆண் ஆசிரியரை இன்று தொடங்கி வருகின்ற புதன்கிழமை வரையில் ரிமாண்டில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஷரிபாஹ் அமிர்டா ஷாஷா அமீர் ஷரிப்புடின் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

நேற்று மாலை 6:55 மணியளவில் பள்ளியின் சிற்றூண்டி சாலையில் ஆங்கில பெண் ஆசிரியர் ஒருவர் சக பணியாளரால் அடித்து உதைக்கப்பட்டதாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்திருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்