சார்டின் திருடிய குற்றத்திற்காக ஒரு மாத சிறை

பத்து பஹாட், ஏப்ரல் 22-

கடை ஒன்றில் சார்டின், தே தூள் மற்றும் திண்பன்டங்களை திருடிய குற்றத்திற்காக முதியவர் ஒருவருக்கு ஜொகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று ஒரு மாத சிறைத்தண்டனை விதித்தது.

மனைவியை இழந்தவரான 64 வயது ஜமாலுதீன் யூசோப் என்ற முதியவர் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி பிற்பகல் 1.15 மணியளவில் ஜொகூர், பாரிட் ராஜா என்ற இடத்திலுள்ள பல்பொருள் விற்பனை கடையில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

10 சார்டின், 2 Nescafe பாட்டில்கள் மற்றும் திண்பன்டங்களை திருடியதாக அந்த பெரியவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 10 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 380 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த முதியவரின் இச்செயலினால் அந்த கடைக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பாராஹ் வாஹிதா நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்