நைட்ரஜன் வாயு வெடித்ததில் தொழிற்சாலை ஊழியர் காயம்

ஷாஹ் அலாம், ஏப்ரல் 22-

கிள்ளான், கோத்தா கெமுனிங்-கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு வெடித்ததில் தொழிற்சாலை ஊழியர் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதுடன் மேலும் இருவர் படுங்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இன்று காலை 10:14 மணியளவில் கிடைக்க பெற்ற புகாரை அடுத்து தீயணைப்பு, மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர், மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் செயல்பாட்டு பிரிவின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மூன்று உள்ளூர் பணியார்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டிருந்த போது nitrogen வாயு வெடித்திருப்பது சம்பவ இடத்தில் கண்டறியப்பட்டதாக அஹ்மத் முக்லிஸ் தகவலளித்தார்.

இந்த வெடிப்பு சம்பவம் தொழிற்சாலை கட்டடத்தை பாதிப்படைய செய்யவில்லை என்பதுடன் அவ்விடத்தில் எந்தவொரு ஆபத்தும் இல்லை என்பதை இரசாயன சிறப்புக் குழுவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்