சண்டையிட்டவர்களில் ஒருவர் அரசு ஊழியர்

கடந்த வாரம் Terengganu Football League இன் போது, கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படுவோரும் ஆறு பேரில் ஒருவர் அரசு ஊழியர் ஆவார் என திரங்கானு போலீஸ் தலைவர் Mazli Mazlan குறிப்பிட்டார்.

கை கலப்பில் ஈடுபட்ட 25 முதல் 40 வயது வரையிலான அவர்களின் நடவடிக்கை ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்டு வைரல் ஆனது.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக, விசாரணை அறிக்கை புக்கிட் அமானுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் இந்த விவகாரம் குற்றவியல் சட்டம் 147 இன் படி விசாரிக்கப்பட்டதாகவும் Mazli Mazlan கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்