பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 01 –
பெட்டாலிங் ஜெயா, சீ பார்க் -கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தகராரின் போது 57 வயதுடைய முதியவர் மரணமுற்ற வேளையில் அதற்கு காரணமாக இருந்த வெளிநாட்டவர் மீது நாளை குற்றச்சாட்டப்படவுள்ளது.
குற்றச்சாட்டப்பட்டிருக்கும் நபர் உட்பட அவரின் நண்பர்களின் ரிமாண்ட் காலாவதியாகிவிட்ட நிலையில் அவர்கள் மீது குற்றச்சாட்டப்படுவதற்கு அட்டர்னி ஜெனரல்-சம்பெர்ஸ்-யிடமிருந்து போலீசார் உத்தரவு பெற்றுள்ளதாகவும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் ஷாஹ்ருல்நிசம் ஜாபார் @ இஸ்மாயில் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை, பெட்டாலிங் ஜெயாவில் அந்நபர் மீது இதுக்குறித்து குற்றச்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஷாஹ்ருல்நிசம் ஜாபார் கூறினார்.
முன்னதாக, கடந்த மார்ச் 22 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் ஒருவர் மற்றொருவரை குத்தியதில் உயிரிழந்ததாக Shahrulnizam Jaafar மேலும் தெளிவுப்படுத்தினார்.