மார்ச் மாதத்தில் வணிகக் குற்றங்கள் வெ.8.89 மில்லியன் இழப்பு

ஜோகூர்பாரு, ஏப்ரல் 01 –

இவ்வாண்டு, மார்ச் மாதத்தில் 848 வணிகக் குற்றங்கள் பதிவாகியிருப்பதுடன், மொத்தம் 8.89 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஜொகூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 306 வணிகக் குற்றப்பதிவுகளே இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இவ்வாண்டு 2 லட்சத்து 59 ஆயிரத்து 955 வெள்ளி அதிகமாக பதிவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.

61 ஆன்லைன் மோசடி, 53 தொலைப்பேசி மோசடி, 41 ‘phantom’ முதலீடுகள், 26 வேலை மோசடிகள் உட்பட 66 பிற மோசடி திட்டங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கியிருப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமிஷனர் எம். குமார் தெரிவித்தார்.

சிண்டிகேட்டின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 84 சதவீதம் உயர்வாக இருந்ததுடன் மொத்தம் 76 லட்சத்து 18 ஆயிரத்து 571 வெள்ளி 70 காசு இழப்பீடு அடைந்ததாக எம். குமார் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்