பெர்மாத்தாங் பாவுஹ், ஏப்ரல் 06-
இவ்வாண்டு இறுதிக்குள், பொதுச்சேவை ஊழியர்களின் சம்பளம், உயர்த்தப்படுவதற்கான முயற்சிகளையும், அதற்கான வழிமுறைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
இந்த சம்பள உயர்வு தொடர்பான விவரங்கள், வரும் அக்டோபர் மாதம், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வெளியிடப்படும் என்று பிரதமர் கோடிகாட்டினார்.
நேற்று பினாங்கு, பெர்மாத்தாங் பாவுஹ், மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் பினாங்கு அளவிலான 2024 ஆம் ஆண்டு மடானி நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.