டிஏபி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த விலகத் தயார்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை தாம் இழக்க நேர்ந்தால், பதவி விலகத் தயாராக இருப்பதாக டிஏபி-யின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். டிஏபி- யை வழிநடத்தக்கூடிய பிரதான பொதுச்செயலாளர் பதவியை வகித்து வருபவர் மீது எந்தவொரு உறுப்பினரும் நம்பிக்கையை இழப்பாரேயானால் இதர உறுப்பினர்களுடன் கூட்டாக குரல் எழுப்பி, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் ​என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கட்சி உறுப்பினர்கள் எப்போதுமே பொதுச் செயலாளர் மீது நம்பிக்கை கொ​ண்டு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்கள் எப்போது இழக்கிறார்களோ தங்கள் அதிருப்தியை கூட்டு முறையில் வெளிப்படுத்தலாம்.

காரணம், டிஏபி-யில் பொதுச் செயலாளர் பதவி என்பது அம்னோ தலைவர் பதவியைப் போல ஒரு கட்சியின் தலைமைப் பதவியாகும். அப்பொறுப்பில் இருக்கும் தாம், உறுப்பினர்களின் ஆதரவைப்பெற தவறினால், பதவி விலக தயாராக இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்