மதுபானம் அருந்திய வாகனமோட்டிகளுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது, தங்கள் வசம் மூவாயிரம் வெள்ளிக்கும் கூடுதலாக ரொக்கத் தொகையை கொண்டிருந்ததாக கூறப்படும் பத்து போலீஸ்காரர்கள், பணித்தன்மை மாற்றப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ உசேன் உமர் கான் தெரிவித்துள்ளார்.
பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த அந்த பத்து போலீஸ்காரர்களுக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை முடியும் வரையில் அவர்கள் நிர்வாகப்பிரிவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று டத்தோ உசேன் உமர் குறிப்பிட்டார்.
கடமையில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு போலீஸ்காரரும் அரச மலேசிய போலீஸ் படையினாரால் வகுக்கப்பட்டுள்ள SOP நடைமுறைகளை பின்பற்றுவது தலையாய கடமையாகும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.