தமது தலைமையிலான புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் செயல்படும் அரசு சார்பு நிறுவனங்களான GLC தொடர்ந்து இழப்பை எதிர்நோக்கி, அரசாங்கத்தின் நிதிக்கு சுமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமானால் அத்தகைய நிறுவனங்கள் மூடப்படும் என்று அதன்அமைச்சரும், துணைப்பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் இதுவரையில் 23 நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதையும் அகமட் ஜாஹிட் சுட்டிக்காட்டினார். சம்பந்தப்பட்ட GLC நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பை எதிர்நோக்குவதை அனுமதிக்க இயலாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.