பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சவூதி அரேபியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொள்ளவிருக்கிறார். இன்று மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு அமையவிருக்கும் பிரதமரின் இந்த அதிகாரத்துவப் பயணம், சவூதி அரேபியா பட்டத்து இளவரசரும் பிரதமருமான Mohammed bin Salman Al Saud அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படவிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பின்னர் டத்தோஸ்ரீ அன்வார், சவூதி அரேபியாவிற்கு மேற்கொள்ளும் முதாவது அதிகாரத்துவப் பயணம் இதுவாகும்.