சவ ஊர்வலதின் போது பட்டாசு கொளுத்திய நபர் கைது

குவாலா லங்காட், மார்ச் 28 –

கடந்த புதன்கிழமை பந்திங் நகரில் சவ ஊர்வலத்தின் போது பிரதான சாலை சந்திப்பின் நடுவே பட்டாசுகளை கொளுத்தி, வாகன போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்ததாக நம்பப்படும் பட்டறை உதவியாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள 28 வயது நபர், எட்டு குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சம்பவத்தன்று போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் கோல லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் அகமாட் ரிட்வான் மொஹமாட் நோர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட நபர் 1957 ஆம் ஆண்டு வெடிப்பொருள் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அஹமாட் ரிட்வான் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்