ஜாசிங், மார்ச் 21 –
ஜாசிங், சுங்கை ராம்பாய், ஜாலான் கம்பூங் செபாத்து வில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவர் தனது நண்பருடன் ஒரு கடையில் காலை உணவை சாப்பிட்டு மோட்டார் சைக்கிளில் மெர்லீமௌ வில் உள்ள வீட்டிற்கு பயணிக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் 19 வயதுடைய இப்ராஹிம் மொகமாட் அடஹாம், சுங்கை ராம்பாய் யிலிருந்து மெர்லீமௌ வை நோக்கி யாமாஹா லெஜேன்டா 115Z மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது இக்கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் அகமாட் ஜாமிலி ரட்சி கூறினார்.
பாதிக்கப்பட்ட அம்மாணவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் சாலையின் ஓரத்தில் சில மீட்டர் தொலைத்தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அகமாட் ஜாமில் தெரிவித்தார்.