நேற்று 18 விபத்துக்கள் பதிவாகியுள்ளன

கோலாலம்பூர், மார்ச் 21 –

நாடு முழுவதும் நேற்று 1,806 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தைய நாளை ஒப்பிடுகையில் 88 விபத்துக்கள் குறைவாகவே பதிவாகியிருப்பதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக கண்டறியப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக மட்டுமே இருந்த வேளையில் நேற்று 18 விபத்துக்களாக உயர்வு கண்டிருப்பதாக மொகமாட் அஸ்மான் விவரித்தார்.

சாலையை பயன்படுத்துவோர் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் ‘ரியல் டைம் சாலை விபத்துக்குறித்த புள்ளிவிவரங்களை அரசாங்கம் வெளியிடுவதாக மொகமாட் அஸ்மான் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்