சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

ஜொகூர் பாரு, ஏப்ரல் 05-

ஜொகூர், கோத்தா திங்கி-யில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று மாலையில் ஜாலான் கோத்தா திங்கி – குலுவாங் சாலையில் 57.5ஆவது கிலோமீட்டரில் அந்த விபத்து நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர் ஓட்டிச் சென்ற பேரோடுவா மைவி-யும் 41 வயது பயணியுடன் சென்ற 42 வயதுடைய ஆடவர் செலுத்திய புரோட்டான் எக்சோரா-வும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக, கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் ஹஸ்ஸின் சமோரா கூறினார்.

புரோட்டான் எக்சோரா வாகனத்தில் வந்த இருவருக்கும் முகம் உட்பட உடலில் சொற்ப காயங்களே ஏற்பட்டிருந்த வேளையில் அம்மாணவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். உயிரிழந்த மாணவரின் உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக ஹஸ்ஸின் சமோரா தெரிவித்தார்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸ் விசாரணையை முடுக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்