டூங்கூன், மார்ச் 31-
புக்கிட் பெசிக்கு அருகில் உள்ள கிழக்கு கரையோர நெடுஞ்சாலை இரண்டின் 362.3 ஆவது கிலோமீட்டார் தொலை தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாட்டியும் அவரின் பேத்தியும் உயிரிழந்தனர்.
இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 86 வயதுடைய கெல்சோம் அப்துலா வும் 20 வயதுடைய பாத்தின் சுலைலாஹுடா சுல்கில்பி யும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
காரில் பயணித்த மற்ற நபர்கள் பலத்த காயமின்றி உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட நபர்கள் கெமாமான்னிலிருந்து குவாலா திரங்கானு விற்கு செல்லும் வழியில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதாக Dungun மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் மைசுரா அப்துல் காடிர் அறிவித்தார்.
அக்கார் இடதுபுறத்தில் உள்ள நெடுஞ்சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி இருந்ததாக மைசுர்ரா அப்துல் கூறினார்.