விளையாட்டு மைதானத்தில் சூதாட்டம் புரிந்த 10 பேர் கைது

கெலுகோர், மார்ச் 31 –

கெலுகோர், பாத்து உபான் ஸ்ட்ரீட் டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து முஸ்லிம் ஆண்களை போலீசார் கைது செய்தனர்.

இன்று காலை 4.45 மணியளவில் குறிப்பிடப்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அந்நபர்கள் கையும் களவுமாக பிடிபட்டதாக தெரியவந்துள்ளது.

வடகிழக்கு மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு துறை அவ்விடத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக வடகிழக்கு போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரஸ்லாம் அப்துல் ஹாமிட் கூ‌றினா‌ர்.

21 க்கும் 36 க்கும் வயதிற்கு உட்பட்ட அந்நபர்கள் திறந்த வெளியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டதாக ரஸ்லாம் அறிவித்தார்.

இந்த சோதனையில் 2,736 வெள்ளி ரொக்கப் பணம், சூதாட்ட பொருட்கள், மேஜைகள் உட்பட சட்டவிரோத நடவடிக்கையில் பயன்படுத்தபட்டதாக நம்பப்படும் மின்விளக்குகள் ஆகியவை பறிமுதல் செய்யபட்டதாக ரஸ்லாம் மேலும் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்